Ethirneechal: மீண்டும் பார்கவி பக்கம் சாய்ந்த தர்ஷன்! ஆடிப்போன வீட்டு ஆண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் பரீட்சைக்கு தயாராகி வெளியே வந்த நிலையில், குணசேகரன் அதற்கு தடையாக இருப்பதுடன் தனது தம்பிகளை வைத்து தடுக்க திட்டம் தீட்டுகின்றார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலில் பெண்கள் மீண்டும் ஆணாதிக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
வீட்டில் தாராவிற்கு சடங்கு ஏற்பாடு செய்து மிகப்பெரிய பிரச்சனையைக் கொண்டு வந்து தடுக்க கதிர் முயற்சி செய்தார்.
ஆனால் இவற்றினை தவிடுபொடியாக்கி சடங்கு நிகழ்ச்சியினை நந்தினி செய்துள்ளார். மேலும் இதற்காக வைக்கப்பட்ட பார்ட்டி ஒன்றில் குடும்பத்தின் பெண்கள் ஆட்டம் போடவும் செய்துள்ளனர்.
இதனால் கடுப்பில் இருந்த குடும்பத்தின் ஆண்கள் பெண்களை அடக்குவதற்கு அடுத்து ஏற்பாடு செய்கின்றனர். இந்நிலையில் தர்ஷன் பார்கவியிடம் பேசி வருவதுடன், அவர் வைத்துள்ள அரியரையும் முடித்துவிடுவதற்கு பரிட்சை எழுத சென்றுள்ளார்.
தர்ஷனின் இந்த மாற்றம் குடும்பத்து ஆண்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியதுடன், தர்ஷனை பரீட்சை எழுத விடாமல் தடுக்கவும் செய்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |