Ethirneechal: விசாலாட்சியை வறுத்தெடுத்த நந்தினி.. பதறிப்போய் ஓடி வரும் ஜனனி- திருமணம் நடக்குமா?
தர்ஷன் திருமணத்தில் துளியளவும் விருப்பம் இல்லாமல் ஒதுங்கி நிற்கும் ரேணுகா, நந்தினியை அழைப்பதற்காக வந்த விசாலாட்சியை இருவரும் சேர்ந்து வறுத்தெடுத்துள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுக்க, அதற்கு சக்தி வைத்தியம் செய்து தர்ஷனனை சுய நினைவுக்கு கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய காதலுக்காக உயிரை பணயம் வைத்திருக்கும் பார்கவி, ஜீவானந்தம் உதவியுடன் மண்டபத்திற்கு அருகில் வந்து விடுகிறார். அசந்த நேரத்தில் மருமகள்கள் தன்னுடைய திட்டத்தை நடத்தி விடுவார்கள் என குணசேகரன், கதிர் இருவரும் உஷாராகவே இருக்கிறார்கள்.
ஜனனியின் கடைசி முடிவு
இது ஒரு புறம் இருக்கையில், நலங்கை பூர்த்தி தர்ஷன் வெளியில் செல்வதற்கு பல தடவைகள் முயற்சி செய்தும் அவரால் மண்டபத்தை விட்டு வெளியில் வர முடியவில்லை திட்டத்தை முறியடிப்பதற்காக கூடிய ஜனனி, ஜீவானாந்தம் இருவரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
ஆனாலும் பார்கவியின் காதலை எப்படியாவது ஒன்று சேர்த்து விட வேண்டும் என நினைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தர்ஷனின் மனதை வெல்வதற்காக விசாலாட்சியும் பல வழிகளில் முயற்சித்து பார்க்கிறார். ஆனாலும் பலன் எதுவும் இல்லை. இதனால் கடுப்பான குணசேகரன் மகனை மிரட்டி மணமேடையில் அமர வைக்கிறார்.
கடைசியில் பார்கவி தர்ஷன் இணைவார்களா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |