Ethirneechal: ஜனனியின் கடைக்கு அதிரடியாக வந்த கலெக்டர்... மாஸ் காட்டிய விசாலாட்சி
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி வெற்றிகரமாக ஹோட்டலை திறந்துள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு குணசேகரன் பல சதிவேலைகளை செய்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தாங்கள் நினைத்தது போன்று சமையல் தொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். அதாவது இவர்களின் தொழிலுக்கு விசாலாட்சியும் முழு ஆதரவு தெரிவித்து தனக்கு தெரிந்த சமையல் ரகசியத்தினையும் கூறுகின்றார்.

இந்நிலையில் கடை திறப்பு விழாவினை நிறுத்துவதற்கு குணசேகரன் பல சதிகளை செய்த நிலையில், அனைத்தையும் தவிடுபொடியாக்கி ஜனனி திறந்துள்ளார்.
எதிர்பாராத நேரத்தில் ஹோட்டலுக்கு கலெக்டர் வந்து ஜனனிக்கு ஆதரவாக பேசியுள்ளார். மாமியார் விசாலாட்சியும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வெளியே வந்துள்ளார்.
ஹோட்டலை திறந்ததால் ஜனனியை தீர்த்து கட்டுவதற்கு குணசேகரன் இளைஞர் ஒருவரை அனுப்பி வைத்துள்ள நிலையில், இதனை ஜனனி நேராக அவதானித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |