Ethirneechal: மருமகள்களுக்கு முழு ஆதரவு அளித்த அப்பத்தா! குணசேகரனின் அடுத்த சதிதிட்டம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் சதிதிட்டத்தினை முறியடித்த அப்பத்தாவின் வருகையால் வீட்டு மருமகள்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. வீட்டு பெண்களை அடக்கி ஆண்ட குணசேகரன் தற்போது தலைமறைவாகி வருகின்றார்.
மருமகள்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துவரும் விசாலாட்சியுடன் தற்போது அப்பத்தாவும் சேர்ந்துள்ளார். அறிவுக்கரசியின் சதிதிட்டத்தினை தர்ஷினி முறியடித்த நிலையில், குணசேகரன் சதிதிட்டத்தினை அப்பத்தா முறியடித்துள்ளார்.

அப்பத்தாவின் வருகையால் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். ஆனால் அறிவுக்கரசி குணசேகரனுக்கு அனைத்து தகவல்களையும் இங்கிருந்து கூறிவருகின்றார்.
குணசேகரின் அடுத்த சதி திட்டம் என்னவாக இருக்கும்? மருமகள்கள் நல்லமுறையில் தனது ஹோட்டல் தொழிலை ஆரம்பித்துவிடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |