Ethirneechal: ஆட்டம் போட்டு குணசேகரனிடம் மாட்டிக் கொண்ட பெண்கள்! எண்ட்ரியான அப்பத்தா
எதிர்நீச்சல் சீரியலில் தாராவிற்கு ஜனனி கொடுத்த இன்ப அதிர்ச்சியால் குடும்பத்தில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவின் சடங்கிற்கு நந்தினியின் உறவுகளை வரவிடாமல் கதிர் பல சூழ்ச்சிகளை செய்தார். மேலும் அறிவுக்கரசி நந்தினியை தலைகுனிய வைப்பதற்கு அவரே சடங்கு செய்ய முயன்றுள்ளார்.
கடைசி தருணத்தில் நந்தினியின் தம்பி வந்து சடங்கு செய்து அசத்தியது, வீட்டில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனனி தாராவிற்காக சில ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், அனைவரும் ஆட்டம் போடவும் செய்துள்ளனர். இதனை கரிகாலன் வீட்டிற்கு வந்து போட்டு காட்டியதால் குணசேகரன் உச்சக்கட்ட கோபத்தில் காணப்படுகின்றார்.
மேலும் அப்பத்தாவும் குறித்த காட்சியில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்த என்னென்ன மாற்றம் நடக்கும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |