பிச்சையெடுக்க விரும்பவில்லை!!! தயவுசெய்து... மில்லியன் இதயங்களை வென்ற பாட்டி
இந்தியாவின் புனேவில் வசிக்கும் மூதாட்டியின் வாழ்க்கை பல லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் Shikha Rathi என்பவர் வெளியிட்ட ஒற்றை புகைப்படம் வைரலானது.
அதில், நானும் என்னுடைய நண்பரும் புனேவில் MG Roadக்கு சென்றோம், அங்கே Ratan என்ற மூதாட்டியை சந்திக்க நேர்ந்தது.
அவர் கைகளில் பேனாக்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அந்த பலகையில் எழுதியிருந்த வாசகங்கள் வெகுவாக எங்களை கவர்ந்தது.
அதில், நான் பிச்சையெடுக்க விரும்பவில்லை, எனவே பேனாக்களை வாங்கிக் கொள்ளுங்கள்.. நன்றி” என இருந்தது.
தள்ளாத வயதிலும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல், உழைக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தால் நெகிழ்ந்து விட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நாங்கள் பேனாவை வாங்கிய போது கூட, அழகான புன்னகையுடன் இருந்தார், அப்போதும் அதிகளவு பேனாவை வாங்கிக் கொள்ளுங்கள் என எங்களை வற்புறுத்தவில்லை என தெரிவித்தார்.
இந்த புகைப்படம் வைரலாக பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.