பிரபல நடிகர் போதை பொருள் வழக்கில் கைது... அடுத்தடுத்து வெளியாகும் பல உண்மைகள்
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தின் “முத்த மழை..” பாடலை தெலுங்கில் பாடிய பாடகி மங்லி என்பவர் தனது பிறந்தநாள் பாட்டியில் போதை பொருள் விநியோகித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவரிடம் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
மதுபான விடுதியில் மோதலில் ஈடுபட்ட போது கைதான பிரசாந்த், ஸ்ரீகாந்திற்கு கொக்கேன் என்ற போதை பொருட்களை வழங்கியதாக போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்பு நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலிசார் அவருக்கு ரத்த பரிசோதனை செய்த போது, போதை பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.
1 கிராம் 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் உண்மை வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கழுகு பட நடிகரும் இவ்வழக்கில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |