வாழ்க்கையில் இந்த தவறை செய்யாதீங்க.. உங்களுக்கே வினையாகும்- பேராசிரியர் பர்வீன் சுல்தானா
எமது சமூகத்தில் பல பட்டங்களை பெற்று, வாழ்க்கை என்றால் என்ன? என்பதனை சரியாக புரிந்து கொண்டு வாழ்பவர்கள் பலரை பார்த்திருப்போம்.
அதில், நமக்கு மிக நெருக்கமான ஆலோசனை வழங்கி, பலரின் வாழ்க்கையை மாற்றிய பேராசிரியர் தான் பர்வீன் சுல்தானா. இவர், வாழ்க்கையின் அனுபவித்த கொடுமைகள், அனுபவங்கள் மற்றும் கற்று தெரிந்து கொண்டவைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு நமது வாழ்க்கையை நல்வழிப்படுத்த மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் சார்ந்த நிகழ்வுகள், பெண்கள் சார்ந்த நிகழ்வுகள் என்றால் அங்கு பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் உரை இல்லாமல் இருக்காது. பெண்கள் செய்யும் தவறுகளை முகத்திற்கு முகம் சுட்டிக் காட்டி, வாழ்க்கையின் ஆழத்தை கூறுவதில் இவரை தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை.
அப்படியொரு மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது,“ இந்த உலகிற்கு நீ எதை கொடுக்கிறாயோ.. அதை தான் இந்த உலகம் உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும்.. அதனால் முடிந்தளவு நல்லதை செய். நல்லதை நினை.. ” என்கிறார்.
இது போன்ற பல நல்ல விடயங்களை மேடையில் பேசியிருந்தார். அதில் நமது வாழ்க்கையை மாற்றும் கருத்துக்களை சிலவற்றை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
வாழ்வை மாற்றும் விதிகள்
1. நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கின்றீர்களோ, அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கிடைப்பவைகளை நினைத்து வறுத்தப்படாமல் அடுத்த வேலையை பார்ப்பதே சிறந்தது.
2. வாழ்க்கையின் எந்த விடயமும் அதுவாக நடக்காது. அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தான் அதனை நடத்திக் காட்ட வேண்டும். உங்களுக்கு என்ன தேவை என்பதனை புரிந்து கொண்டு, அதன்படி பயணிப்பது நல்லது.
3. நமக்கு நடக்கும் சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.
4. நாம் மாறும் பொழுது நம்மை சுற்றியிருக்கும் நம்மையுடைய சூழலும் மாறும். இதனை தெரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள். முயற்சித்து பாருப்பது நல்லது.
5. நேற்று, இன்று, நாளை இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. எனவே உங்கள் வாழ்க்கையை சரியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்ள ஒரே வழி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |