காலையில் எழுந்ததும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம்
காலையில் எழுந்ததும் என்னென்ன விடயங்களை செய்தால் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலையில் எழுந்து நாம் பார்க்கும் முதல் பார்வை அன்றைய நாளை தீர்மானிப்பதாக பெரும்பாலான நபர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
அன்றைய நாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், ஆரோக்கியத்துடனும் அமைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள்.
ஆரோக்கியமாக இருப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம் ஆகும். காலை உணவு நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்தாலும், ஜோதிட ரீதியில் சில வாஸ்துக்களை மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
அந்த வகையில் காலையில் எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை வாஸ்டிபடி தெரிந்து கொள்வோம்.

என்ன செய்யக்கூடாது?
காலையில் எழுந்ததுமே கண்ணாடியை பார்ப்பது அபசகுணமாக கருதப்படுவதால் ஒருபோதும் கண்ணாடியில் முகத்தை பார்க்காதீங்க.
காலையில் குளிக்காமல் உணவை சாப்பிடக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் தங்காது.
காலையில் எழுந்ததும் எதிர்மறையான வார்த்தைகளை பேசுவது, கோபமாக மற்றவர்களை பேசுவது கூடாது.

image: shutterstock
என்ன செய்யலாம்?
காலையில் எழுந்ததும் தெய்வங்களின் பெயரை உச்சரித்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் வருவதுடன், நிம்மதியும் இருக்கும்.
காலையில் எழுந்து நீராடிவிட்டு நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனமிட்டு கொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்று கூறப்படுகின்றது.
காலையில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்குமாம்.

உள்ளங்கை மகாலட்சுமியின் அம்சம் என்பதால் காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்த்தால் பண வரவு அதிகரிக்கும்.
காலையில் எழுந்ததும் பூஜை அறையில் தெய்வங்களை பார்ப்பது நல்லது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |