தண்ணீரில் தத்தளித்த நாய்! ஊரே திரண்டு காப்பாற்றிய ஆச்சரியம்
தண்ணீருக்குள் சிக்கி தப்பிக்க வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த நாயை அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு நாயை பத்திரமாக மீட்டெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீரினுள் நாய்க்குட்டி ஒன்று மாட்டிக்கொள்கிறது.
அந்த பாலத்தின் இடையே உள்ள ஒரு ஓட்டைக்குள் அந்த நாய் பயந்து நின்றுகொண்டு தப்பிக்க வழிதெரியாமல் தவித்துக்கொண்டு நீரில் தத்தளித்து நிற்கிறது.
உடனே அப்பகுதி மக்கள் நாயை காப்பாத்த நாய் ஏறுவதற்கு வாகாக ஒரு கூடையில் கயிறை கட்டி அதனை அந்த தண்ணீரில் நாய்க்கு அருகே கொண்டு செல்கின்றனர்.
Humanity..🐕🐾💪 ❤️ pic.twitter.com/giEUC1Q0ZL
— 𝕐o̴g̴ (@Yoda4ever) August 3, 2022
உடனே அந்த நாயும் சரியாக அந்த கூடையினுள் ஏறி அமர்ந்ந்துகொள்கிறது, கூடையினுள் நாய் ஏறியதை உறுதிசெய்த அந்த நபர்கள் வேகமாக அந்த கூடையிலிருக்கும் நாயை மேலே இழுத்து தரையில் விடுகின்றனர்.
தண்ணீரிலிருந்து வெளியே வந்ததும் அந்த நாய் தன் மேலே உள்ள நீரை உதறிவிட்டு நகர்கிறது, மீண்டும் அது நீரில் விழுந்திடாத வண்ணம் அவர்கள் நாயை பாதுகாக்கின்றனர்.