Viral Video: உயிரிழந்த உரிமையாளர்! 4 நாட்கள் நடுநடுங்கி நின்ற நாயின் பாசப்போராட்டம்
பனிப்பொழிவினால் உயிரிழந்த உரிமையாளரின் சடலத்துடன் நாய் ஒன்று 4 நாட்கள் நடுநடுங்கியுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
உரிமையாளர் சடலத்துடன் நடுநடுங்கிய நாய்
பொதுவாக நாய் எப்பொழுதும் நன்றியுள்ள விலங்காகவே பார்க்கப்படுகின்றது. தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் கண்கலங்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்தியாவில் ஹிமாச்சால பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பியூஷ் குமார் என்ற 13 வயது சிறுவன் தனது 19 வயது உறவினருடன் பனிப்பொழிவு நிறைந்த இடத்திற்கு டிரக்கிங் சென்றுள்ளார்.

அவர்கள் செல்லும் போது தான் வளர்த்த நாயையும் அழைத்துச் சென்றுள்ளனர். சரியான உணவு இல்லாமல், குளிர் தாங்க முடியாமல் இருவரும் அந்த பனியில் உயிரிழந்துள்ளனர்.
உரிமையாளர் உயிரிழந்த நிலையில் செய்வதறியாது தவித்த நாய் 4 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் குளிரில் நடுநடுங்கிய படி உள்ளது கண்ணீர் வரவழைத்துள்ளது.
பின்பு இந்திய ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக நாயையும், நாயின் உரிமையாளர் இருவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர்.
Pet dog guards body of owner for 4 days amid snow in Himachal Pradesh’s Chamba pic.twitter.com/HlYo5B2ddG
— NDTV (@ndtv) January 27, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |