ஒரு மாதத்திற்கு இரவு உணவு தவிர்த்தால் என்னவாகும்? எடையை குறைக்க இந்த தவறை செய்யாதீங்க
இரவு உணவை ஒரு மாதத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பினால் அனைத்து வயதினரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பலரும் பல சிகிச்சையினை மேற்கொள்கின்றனர்.
ஒரு சிலர் டயட் என்ற பெயரில் உணவில் கட்டுப்பாடு வைத்துள்ளார். இன்னும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் உடல் எடை குறைந்துவிடும் என்று நினைக்கின்றனர்.
அதிலும் பெரும்பாலானோ இரவு உணவினை சாப்பிடாமல் தவிர்த்து வருகின்றனர். திடீரென இரவு உணவை தவிர்த்தால் நடக்கும் மாற்றம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இரவு உணவை தவிர்த்தல்
இரவு நேர உணவினை தவிர்த்தால், உடலனானது சேமித்து வைத்துள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காக பயன்படுத்துகின்றது. இதனால் உடல் எடை குறைவதுடன், சர்க்கரை அளவும் குறையும்.
ஆனால் கடுமையான சர்க்கரை குறைவு தலைசுற்றல், எரிச்சல், சோர்வு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
பிரச்சனை என்ன?
இரவில் சாப்பிடாமல் இருந்தால், வளர்சிதை மாற்றம் குறையுமாம். உடல் குறைந்த உணவை உட்கொள்ளும் நலைக்கு மாறிவிட்டால் தேவையான கலோரியில் கூட உணவு சாப்பிட முடியாதாம். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும்.
தினசரி தேவையான புரோட்டீன் கிடைக்காத போது ஆற்றலுக்காக உடல் தசைகளை எரிக்க ஆரம்பித்துவிடும். தசை இழப்பு உண்டாகி பலவீனமாக உணர்வீங்க.
டயட் மற்றும் கலோரி கட்டுப்பாடு நீண்ட நாட்களுக்கு பின்பற்றுவது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கலாம். சில தருணங்களில் உடல் எடை எதிர்பார்க்காத அளவு அதிகரிக்குமாம்.
நீங்கள் இரவு உணவை தவிர்கும்போது வளர்ச்சிதை மாற்ற அளவு குறையும். உடலின் ஆற்றல் குறையும். உடல் பலவீனத்தால் முழுமையான உழைப்பை கொடுக்க முடியாது.
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், நாள்பட்ட நோய்களுக்காக மாத்திரை எடுத்துக்கொள்வோர் ஆகியோர் கட்டாயம் இரவு உணவை தவிர்க்கவே கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
