உக்கிரமாகும் சனியால் இந்த 3 ராசிக்கும் 3 மாதத்தில் கஷ்ட காலம் ஆரம்பம்.. ஏழரை சனியால் அழிவு நிச்சயம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார்.
இதனால் மகர ராசியில் ஏழரை சனியின் இரண்டாம் கட்டமும், கும்ப ராசியில் முதல் கட்டமும், தனுசு ராசியில் 3 ஆம் கட்டமும் நடக்கிறது.
ஆனால் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி இடம் மாறப் போகிறார்.
இதனால் ஏழரை சனியின் தாக்கம் பின்வரும் 3 ராசிகளில் இருக்கும்.
இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
இந்த 3 ராசிக்கும் எச்சரிக்கை
2022 இல் கும்ப ராசியில் ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. ஆகவே கும்ப ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
அழிவை தடுக்க இத்தகைய சூழ்நிலையில் நல்ல செயல்களை செய்ய முயலுங்கள். தான, தர்மங்களை செய்யுங்கள். இதனால் சனி தொடர்பான தொல்லைகள் குறையும்.
கும்ப ராசிக்கு சனி பகவான் இடம் மாறுவதால், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு முதல் கட்டமும் தொடங்குகிறது.
இதனால் மகர ராசிக்காரர்கள் இதுவரை சனி பகவானின் சோதனையால் சந்தித்த துன்பங்கள் குறைந்து, சற்று நற்பலன்களைப் பெறுவார்கள். மீன ராசிக்காரர்கள் மனப் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். ஏழரை சனி முடியும் போது சனி பகவான் அந்த ராசிக்காரர்களுக்கு எதையாவது கொடுத்துவிட்டு செல்வார் . இத்தகைய சூழ்நிலையில் தனுசு ராசிக்காரர்கள் சில நன்மைகளைப் பெறுவார்கள்.
அஷ்டம, அர்தாஷ்டம சனியின் தாக்கம் இரண்டரை வருடங்கள் ஆகும். 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி நடக்கும் சனி பெயர்ச்சியால், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம, அர்தாஷ்டம சனி ஆரம்பமாகிறது.
அதே வேளையில் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம, அர்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுவார்கள்.