ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்ல.. மனம் திறந்த தனுஷ்
தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி அடிப்பட்டு வந்த தனுஷ், முதல் தடவையாக அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதனை ஓபனாக பேசியிருக்கிறார்.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ்.
இவர், நடிகரையும் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தனுஷ் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. இயக்கிய படங்களில், ராயன் திரைப்படம் வெற்றிப் படமாக மாறியது.
சாப்பாட்டுக்கு கூட வழியில்ல..
இந்த நிலையில், தற்போது குபேரா திரைப்படம் உருவாகி, திரைக்கு வரவிருக்கிறது.
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய இந்த திரைப்படத்தில், தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் எப்போதும் போன்று வேஷ்டி சட்டை கலந்து கொண்ட தனுஷ், ஒரு சில விடயங்கள் குறித்து ஆணித்தனமாக பேசியிருக்கிறார். அதில், “அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப தான் வாழ்க்கை அமையும். யாரும் யாரைப் பற்றியும் வதந்தி பரப்ப கூடாது.
என்னை பற்றி எந்தளவிற்கு வேண்டுமானாலும் வதந்திகள், எதிர்மறை கருத்துக்களை பரப்புங்கள். ஏனெனின் என்னுடன் இருப்பவர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னை பற்றி தெரியும். ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாமல் நான் இருந்திருக்கிறேன்.
இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். யார் என்ன நிலையில், இருந்தாலும் சந்தோஷம், நிம்மதி இரண்டுமே அவர்கள் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறது. வெளியில் தேடுவதால் எந்தவித பயனும் இல்லை..” என பேசியிருக்கிறார்.
குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷிற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |