மருமகனின் வளர்ச்சியில் கவனமாக இருந்த ரஜினி... நன்றி மறந்த தனுஷ்... ஐஸ்வர்யா வெளியிட்ட அரிய புகைப்படம்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் பிரிந்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் இறுதியாக ஜோடியாக ரஜினி மற்றும் தனுஷ் பதக்கங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த நாட்கள் மீண்டும் வருமா என்று கவலை வெளியிட்டு வருகின்றனர்.
தனுஷ் மிகச்சிறந்த நடிகராக இருந்த போதும், ஆரம்பகாலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தது ரஜினிகாந்த் தான். ஆனால், தற்போது அவரை தனுஷ் மறந்துவிட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
தனுஷ் இந்தி படங்கள், ஆங்கிலப்படம் என்பதைத்தாண்டி ஹாலிவுட் படத்திலும் கால் பதித்துவிட்டார். இவ்வளவு தூர பயணம், வெற்றிகள் எளிதாக கிடைத்துவிடவில்லை தனுஷுக்கு.
அவரது திறமை முக்கிய காரணம். அசுரன், கர்ணன் என வெற்றி மாறன், மாரி செல்வராஜ் கூட்டணி தனுஷை திரும்பிப்பார்க்க வைத்தது. இந்தப்படங்கள் ஜெய்பீம் போல் சமுதாயத்தில் உள்ள மோசமான விஷயங்களை படம் போட்டு காட்டினாலும் தனுஷுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு வராமல் கேடயமாக அமைந்தது ரஜினி எனும் பிம்பம்.
ஓராயிரம் திறமைமிக்க தனுஷ்கள் உள்ள சினிமா உலகம் இது. அவர் இனி எடுத்து வைக்கும் அடியை சற்று யோசித்துத்தான் எடுத்து வைக்க வேண்டும்.
ஏனென்றால் கைதூக்கிவிட ரஜினி எனும் ஏணி அங்கு இருக்காது.
ரியாலிட்டி என்கிற பெயரில் பொழுதுபோக்கு அம்சமான சினிமா எல்லை மீறுவதே இதுபோன்ற நடிகர்களின் சொந்த வாழ்க்கை பாதிக்க பெரிய காரணமாக மாறிவருவதாக அதிர்ச்சியான ரிப்போர்ட்டுகள் வெளியாகி வருகின்றன.
சிலர் சினிமா வேறு சொந்த வாழ்க்கை வேறு என புரிந்து கொண்டு வாழ்வதால் குடும்ப உறவில் விரிசல் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.