தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் - குழந்தைகள் இனி யாருடன் இருப்பார்கள்?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இது கணவன் மனைவி பிரச்சினை தான், விவாகரத்து எல்லாம் செல்லமாட்டார்கள் என கூறியிருந்தார்.
இதனிடையே, பல தகவல்கள் பரவி வரும் நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவின் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் அப்போ என நெட்டிசன்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் தெரிவிக்கையில், இந்தியாவில் குழந்தைகள் மீதான கஸ்டடி உரிமை அம்மா, அப்பா இருவருக்கும் சமமாகவே உள்ளது.
மேலும், கஸ்டடி எடுக்கும் அம்மாவோ, அப்பாவோ அந்த குழந்தைக்கு ஆதரவாக அறிவிக்கப்படுவார்கள். அப்படி கஸ்டடி எடுக்காதவர்களுக்கு பார்க்கும் உரிமை வழங்கப்படும்.
குறிப்பாக குழந்தைகள் 9 வயதுக்கு குறைவாக இருந்தால் அம்மாவின் கஷ்டடியில் தான் இருப்பார்கள்.
ஆனால், தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி குழந்தைகள் இருவருக்குமே 9 வயதை தாண்டிவிட்டதால், குழந்தைகள் கஷ்டடி விஷயத்தில், அவர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.