திடீரென சுருண்டு விழுந்த மான்- வயிற்றில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களால் பல உயிரினங்கள் பாதிப்படைக்கின்றன. மேலும், வன விலங்கு பாதுகாப்பு துறையினர்கள் அதிகளவில் மரம் வளர்க்கவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில், நன் நான் மாகாணத்தில் உள்ளது குன் சதான் தேசிய வனவிலங்கு பூங்கா. இந்த பூங்காவில் 10 வயது உள்ள மான் ஒன்று திடீரென இறந்துள்ள சம்பவம் வனவிலங்கு பூங்காவின் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
மேலும், இறந்து போன மானின் உடலில் எந்த விதமான காயங்களும் இல்லாதது அவர்களை இன்னும் குழப்பமடையச் செய்தது. இதனால், மானின் சாவில் சந்தேகமடைந்த வனத்துறை அதிகாரிகள் இறந்துப் போன மானின் உடலை, கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தார்கள்.
அப்போது இறந்து போன மானின் வயிற்றில் இருந்து 7 கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பைகளையும், ப்ளாஸ்டிக் காபி கப், ரப்பர் கையுறை, துண்டுகள் மற்றும் உள்ளாடைகள் என இருந்து கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவேண்டும் என கூறியுள்ளனர். இச்சம்பவம் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.