40 வயதிலும் குறையாத அழகு.. ஆரஞ்சு நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் டிடி!
பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), 40 வயதைக் கடந்த நிலையிலும் தனது அழகாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தற்போது அவர் ஆரஞ்சு நிற புடவையில் எடுத்துக் கொண்டுள்ள அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்திலை் வைரலாகி வருகின்றன.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அவரை அன்புடன் “டிடி” என்று அழைத்து வருவது வழக்கம். பின்னர் அந்த பெயரே அவரது அடையாளமாகவே மாறியது என்று சொன்னால் மிகையாகாது.
சின்னத்திரையில் உச்சத்தைத் தொட்ட டிடி, விசில், பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் சில படங்களுக்கு பின்னணி குரலும் வழங்கியுள்ளார். தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தபோதிலும், தனிமையிலும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது கலகலப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான கேள்விகளின் மூலம் பிரபலங்களிடமிருந்து சுவாரஸ்யமான பதில்களை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் திறமை கொண்டவர் டிடி.
எனினும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாக காண முடியவில்லை.

இந்நிலையில், டிடி சமீபத்தில் ஆரஞ்சு நிற புடவையில் கியூட்டான போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வேகமாக லைக்குளை குவித்த வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |