மொபைலுக்கு 100% சார்ஜ் போட்டால் எந்த வகையில் ஆபத்து வரும்?
நாள் முழுவதும் மொபைல் போனுக்கு 100 சதவீதம் சார்ஜ் போட்டால் அது மொபைல் போனை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மொபைல் போன்
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் மொபைல் போனை அதிகமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச்செல்லும் வரைக்கும் நாம்முடன் இணைபிரியாமல் இருப்பது நம்முடைய மொபைல் போன் தான்.
எதாவது ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அதையும் நாம் மொபைல் போனில் தான் தேடிவோம். இப்படி நம் வாழ்க்கைக்கு முக்கியமாக இருக்கும் மொபைல் போனை எப்போதும் சார்ஜ் போட்டு வைப்பது நமது கடமையாகும்.
இதனால் சிலர் இதை ஒரே தடவையில் ஒவ்வொரு நாளும் 100 சதவீதம் சார்ஜ் ஏத்துகின்றனர். இது ஆபத்தானதா இல்லையா என்பதை நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

100 சதவீதம் சார்ஜ்
நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. எனவே நாம் போனை முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் செய்யும் போது போனில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி பழுதடையும்.
இதனால் போனின் திறனில் மாற்றம் உண்டாகும். பொதுவாக, தொலைபேசி பேட்டரி ஒரு சுழற்சியில் வேலை செய்கிறது. நீங்கள் போனை 0 முதல் 100 வரை முழுமையாக சார்ஜ் செய்தால், அது பேட்டரி ஆயுளைக் குறைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக போனினுடைய பேட்ரியும் பாதிப்படையும். இதனால் பேட்டரி அதிக வெப்பமடைந்து தன்னுடைய திறனை இழக்கும். போன் சூடானால் பேட்டரியை மோசமாக பாதிக்கும்.
எனவே போனை 100 சதவீதம் செய்வதை இனிமேல் நிறுத்துங்கள். போனில் 20 சதவீதம் சார்ஜ் இருக்கும் போது அதை சார்ஜ் செய்வது அவசியம்.

பின்னர் 80 சதவீதம் சார்ஜ் ஏறியதன் பின்னர் நீங்கள் பொனை சார்ஜில் இருந்து கழற்றி விட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே போனை அதிக நாட்களுக்கு எந்த பழுதும் இல்லாமல் பார்காக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |