பொடுகு ரொம்ப அசிங்கமாக இருக்கா? அப்போ இஞ்சி+கறிவேப்பிலை பேக் போடுங்க- பலன் நிச்சயம்
பொடுகுத் தொல்லை அல்லது உச்சந்தலையில் அரிப்பு பிரச்சினையுள்ளவர்கள் கவலைப்படாமல் அதற்கு எப்படி தீர்வுக் கொடுக்கலாம் என்பதனை அறிந்து கொள்வது அவசியம்.
பொடுகு இல்லாத, பட்டுபோன்ற மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற நினைப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் ரசாயனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் செய்யக் கூடிய பேக்குகளை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.
அந்த வகையில், இரண்டே வாரத்தில் பொடுகு தொல்லையை விரட்டியடிக்கும் பேக் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை- 5-7 நசுக்கிய
- இஞ்சி - 2 அங்குல நசுக்கிய துண்டு
பேக் தயாரிப்புமுறை
ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து, மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை சரியாக 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து விட்டு, குளிப்பதற்கு முன்னர் உச்சந்தலையில் இருந்து நன்றாக தலைக்கு பூசவும்.
தயிர், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து பேக்காக போடும் பொழுது தலையில் இருக்கும் அரிப்பு குறைந்து விடும். அத்துடன் தயிர், அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டுள்ளது.
இது அரிப்பு இனி வராமல் கட்டுப்படுத்துகிறது. தயிர் ஒரு சிறந்த இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடியை சுவாசிக்க வைக்கிறது.
இந்த ஈரப்பதமூட்டும் தன்மை, உலர்ந்த முடியை மென்மையாக்குவதோடு, முடி பிளவுபடுவதையும் கட்டுக்குள் வைக்கும். தலைமுடி வளர்ச்சியையும் கறிவேப்பிலை அதிகமாக்கும்.
பலன்கள்
1. புரதச்சத்து நிறைந்த தயிரை தலைக்கு போடும் பொழுது தலைமுடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். தலைக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்கும்.
2. பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் கறிவேப்பிலையை பயன்படுத்தும் பொழுது தலையில் உள்ள அரிப்பு இல்லாமல் போகும்.
3. அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை இஞ்சிக் கொண்டுள்ளதால் இறந்த செல்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படுகிறது. தொல்லையுடன் இருக்கும் உதிர்வும் கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
