நாவூறும் சுவையில் இட்லி பொடி!!! எப்படி செய்வது?
சட்னி, சாம்பார் சாப்பிட்டு சலித்து போய்விட்டதா? நாவூறும் சுவையில் இட்லி பொடி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு- அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அதுபோல் மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன் அவைகளுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.
இந்த பொடியை சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.