தோல்வில் இருந்து மீண்ட சென்னை அணிக்கு வாழ்த்துக்கள்... முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்! கொண்டாடும் ரசிகர்கள்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வென்று நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது.
சென்னை அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அசத்தாலன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய பாப் டுப்ளஸ்ஸி 86 ரன்கள் அடித்து விளாசினார்.
இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க சுபமான் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பான ஒரு தொடக்கத்தை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது.
இரண்டு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இதில் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதில் 5 பவுண்டரி, 3 சிக்சரும் அடங்கும். நிதானமாக ஆடிய கில் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ரன்னுக்கும், தினேஷ் கார்த்திக் 9 ரன்னுக்கும், சாகிப் அல் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக பெறுகிறது. இந்நிலையில், சென்னையின் வெற்றியை குறித்து பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதில், “அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கர்ஜித்துள்ளது. அணியின் வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதுமுள்ள சென்னை அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தோல்வியில் இருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள @msdhoni தலைமையிலான @ChennaiIPL அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும்- அணி நிர்வாகம் & சென்னை அணியின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.#SuperCham21ons
— Udhay (@Udhaystalin) October 15, 2021
#WhistlePodu pic.twitter.com/e6PrwEJDjd
அவரைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினும், அவரின் ட்விட்டர் பக்கத்தில், “தோல்வியில் இருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள @msdhoni தலைமையிலான @ChennaiIPL அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும்- அணி நிர்வாகம் & சென்னை அணியின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
[Fantabulous performance from @ChennaiIPL!
— M.K.Stalin (@mkstalin) October 15, 2021
The kings have roared back.
Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time.
Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove #IPLFinal pic.twitter.com/N3V8khxrMO
"We’ll come back stronger, that’s what we are known for." - #MSDhoni in 2020
— Star Sports (@StarSportsIndia) October 15, 2021
He made #CSK #Believe & win their 4th IPL 🏆 in #IPL2021!#CSKvsKKR #IPLFinal #VIVOIPL #WhistlePodu #Yellove pic.twitter.com/GxjwFmT4Y9