முட்டையை உடைத்த காகத்தை காத்திருந்து பழிவாங்கிய பறவை: வியப்பூட்டும் காட்சி!
தனது கூட்டுக்குள் புகுந்து முட்டையை உடைத்த காகத்தை காத்திருந்து பழிவாங்கிய பறவையின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த உலகில் மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கு பொதுவான விடயமாக பார்க்கப்படுவது தான் தாய் பாசம்.
தாய் பாசத்துக்கு நிகரான சுயநலம் அற்ற கலப்படம் இல்லாத பாசத்தை யாரிடமும் எதிர்பார்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதனை பறைசாற்றும் வகையில், கூட்டுக்குள் புகுந்து ஒரு பறவையின் முட்டைகளை உடைத்து சாப்பிட்ட காகத்தை தாய் பறவை காத்திருந்து பழிவாங்கும் காட்சியொன்று தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பழிக்கு ..பழிவாங்குவது எப்படி கொடூரமாக இருக்கும்👇 pic.twitter.com/aGqB18SfNe
— Aadhavan (@aadaavaan) July 3, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |