பசியால் மயங்கி விழுந்த நபர்: பாசப் போராட்டம் நிகழ்த்திய மாடு! உதவி செய்தது யார் தெரியுமா?
மாடு ஒன்றினை வைத்துக்கொண்டு தனது பசிக்கு வீடு வீடாக சென்று தர்மம் கேட்கும் நபர் ஒருவர் பசியால் மயங்கி கீழே விழுந்த நிலையில், பாசத்தில் மாடு செய்த காரியம் காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
கிராமங்களில் கோடாங்கி என்று கூறப்படுவார்கள் இந்த நபர்கள். குறித்த காட்சியில் வீடு ஒன்றில் மாடு ஒன்றுடன் நின்று கொண்டு பசிக்கு ஏதாவது கொடுக்குமாறு கேட்கின்றார்.
ஆனால் அங்கிருந்த பெண் இல்லை என்று அனுப்ப சில நொடிகளில் பசியால் மயங்கி விழுகின்றார். உடனே மாடு அவரை எழுப்ப முயன்று தடவி கொடுக்கின்றது.
இதனை அவதானித்து செல்லும் நபர்கள் யாரும் உதவாத நிலையில், சிறுமி ஒருவர் தண்ணீர் மற்றும் சில வாழைப்பழத்தினைக் கொடுத்துள்ளார். பின்பு நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தினை காணொளியில் காணலாம்.