கொரோனாவால் உயிரிழந்த நபர்... இறுதிச்சடங்கில் தொட்டுப்பார்த்த உறவினர்கள்! 21 பேர் பரிதாபமாக பலி
கொரோனாவினால் உயிரிழந்தவரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் செய்யப்பட்ட இறுதிச்சடங்கினால் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை பொதுவாக பாதுகாப்பு உடை அணிந்து சுகாதாரத் துறையினரையே அடக்கம் செய்து வந்த நிலையில், தற்போது உறவினர்களின் கோரிக்கையினால் குடும்பத்தினரிடம் இறந்தவரின் உடலை ஒப்படைக்கின்றனர்.
ஆனால் அவ்வாறு ஒப்படைத்தாலும், அவர்கள் கூறும் நெறிமுறைகளை கடைபிடித்து தான் இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். ஆனால் இதனை மீறிய ஒரு கிராமம் தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள கீர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்துள்ளார்.
இவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் இறுதிச்சடங்கின் போது, உடலை போர்த்தியிருந்த பிளாஸ்டிக் கவரைப் பிரித்ததுடன், இறந்தவரின் உடலையும் தொட்டுப்பார்த்துள்ளனர்.
சுமார் 150 பேர் கலந்து கொண்ட இந்த இறுதிச்சடங்களில், அடுத்தடுத்து 21 பேர் உயிரிழந்துள்ளது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து சரக டிவிஷனல் அதிகாரி குல்ராஜ் மீனா கூறுகையில், உயிரிழந்த 21 பேரில் 3 - 4 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியோர்களாக உள்ளனர்.
இங்கு சமூக பரவல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 147 பேரின் மாதிரிகளை கொரோனா சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த கிராமத்திற்கு உடன்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவிந்த் சிங், முதலில் இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவிட்டு பின்பு அதனை நீக்கியுள்ளார்.
குறித்த பதிவில் “ஆழ்ந்த வருத்தத்துடன் நான் இதனை தெரிவிக்கிறேன், 20 க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை இழந்துவிட்டார்கள், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.