குற்றால அருவிகளில் குளியல் போட ஆசையா? அப்போ இந்த விடயத்தை தெரிஞ்சிக்கோங்க
குற்றால சீசன் ஆரம்பித்து விட்டது. இதனால் வீட்டிலுள்ளவர்கள் பையை தூக்கிக் கொண்டு தயார் நிலையில் இருப்பார்கள்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் குற்றால அருவியில் குளிப்பதற்காகவே தன்னுடைய சுற்றுலாவை திட்டமிடுவார்கள்.
இது தென்னகத்தின் 'மருந்து நீரூற்று' ஆரோக்கிய நீரூற்று என கூறப்படுகிறது. அரிய வகை மூலிகைகளின் வழியாக தவழ்ந்து வரும் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழலாம்.
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு சிறப்பை தெரிந்து கொண்டு, இந்த அருவில் குளிப்பதற்காக வருவார்கள்.
அந்த வகையில், குற்றாலத்தில் என்னென்ன அருவிகள் பிரபலமாக உள்ளது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பேரருவி (மெயின் அருவி)
- இந்த அருவி பொதுவாகவே குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து பேரருவி, மெயின் அருவி என்றும் அழைக்கப்படுகிறது. சுமாராக 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து கீழே விழுகிறது. இந்த நீரில் குளிப்பதற்கு ஆசையாக இருக்கும். ஆனால் அதனை தரிசிக்க மாத்திரமே முடியும். குளிப்பதற்கு அனுமதி இல்லை.
ஐந்தருவி
- குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் இந்த இடம் உள்ளது. திரிகூட மலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி ஓடி வந்து ஐந்து கிளைகளாக பிரிந்து இந்த நீரில் கீழே விழுகிறது. பெண்கள் குளிக்க இரு அருவிகளும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் குறிக்க மூன்று அருவிகளும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குளிக்கும்போது ஒரு உற்சாகம் கிடைக்கும். இதனால் இது உற்சாக ஊற்று என அழைக்கப்படுகிறது. கோயில் தரிசனமும் பெறலாம்.
பழத்தோட்ட அருவி
- பழத்தோட்ட அருவி, ஐந்தருவியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டாலும், தோட்டக்கலை துறையினரால் இங்கு சிறுவர் பூங்கா உருவாக்கப்பட்டு பூஞ்செடிகளும், மரக்கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
புலியருவி
- குற்றாலத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புலியருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருவியில் 10 அடி உயரத்தில் தண்ணீர் விழுகிறது. சிறுவர்கள் குளிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள் என்றால் இந்த அருவி பாதுகாப்பானதாக இருக்கும்.
பழைய குற்றால அருவி
- குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ தொலைவில் இந்த அருவி உள்ளது.
பாலருவி
- பாலருவி, தேனருவி அருகே அமைந்துள்ளது என்றாலும் இங்கு வரும் மக்கள் இதையும் அருவி என்றே அழைக்கிறார்கள்.
தேனருவி
- செண்பகாதேவி அருவிக்கும் மேலே தேனருவி அமைந்துள்ளது. ராட்சத தேன் கூடுகள் சூழ்ந்த மலையிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதன் காரணமாக இந்த அருவிக்கு தேனருவி என பெயர் வந்தது. மிகவும் ஆபத்தான அருவியாக கருதப்படுவதால் இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிற்றருவி
- மெயின் அருவிக்கு மேலே நடந்து செல்லும் தூரத்தில் சிற்றருவி அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.குற்றாலம் செங்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் தென்காசியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குறித்த இடம் அமைந்துள்ளது.
- தென்காசி, செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்கள் அருகில் உள்ளது. இங்கு ஜூன், ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் அதிகமான பயணிகள் வருகை தருவார்கள். குற்றாலம் சென்று அருவியில் குளித்து தென்றல் காற்றின் ஜிலு ஜிலுப்பை அனுபவிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |