கொரோனாவிலிருந்து தப்பிக்க அரசு அதிகாரி செய்த அசத்தலான காரியம்... என்னனு நீங்களே பாருங்க
உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது பயங்கர வேகமாக பரவி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.
தமிழகத்தில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவிய போது பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கையும், விழிப்புணர்வுகள் பல நடத்தியும், கொரோனாவின் அச்சம் காரணமாகவும் மக்கள் உஷாராக இருந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் குறித்தான அச்சம் மக்களிடம் குறைந்துள்ளதால் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வெகு தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், உயர் அதிகாரி ஒருவர் தன்னை கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்காக வித்தியாசமான செயலை செய்துள்ளார்.
ஆம் தனது கையில் கொத்தாக வேப்பிலையினை வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியினை மூடியபடி கலந்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த அதிகாரி மாஸ்க் போட்டிருந்தாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக வேப்பிலை கொத்தை வைத்திருப்பதாகவும், யாராவது அவரிடம் பேசவந்தாலும் சரி, இவர் பேசினாலும் சரி முகத்தில் வேப்பிலையினை வைத்து கொண்டே கேட்டு கொண்டு பேசியதாக கூறுகின்றனர்.