கொரோனா தடுப்பூசி விலை தற்போது என்ன? சீரம் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவுப்பு!
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் சீரம் நிறுவனம் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை தயார் செய்து வருகிறது.
மேலும், மே மாதம் 1 ஆம் தேதி முதல் மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மாநிலங்களுக்குக் ஒரு டோஸ் ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 ஆக விற்பனை செய்யப்படும் எனவும், மத்திய அரசுக்கு தற்போது வழங்கப்படும் தடுப்பூசி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படும் எனவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைப்போன்று, உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி அமெரிக்காவில் இந்திய மதிப்பில் ரூ.1500 ஆகவும், ரஷியா மற்றும் சீனாவில் ரூ.750 ஆகவும் விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.