புகழை அழவைத்து TRP ஏற்றும் பிரபல டிவி! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றதுமே சட்டென நினைவுக்கு வருபவர் புகழ் தான், அந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.
ஷிவாங்கியுடன் தங்கை பாசம், பவித்ராவுடன் ரொமான்ஸ், அஸ்வினுடன் மச்சான் உறவு, ஷகீலாவுடன் அம்மா பாசம் என ஒவ்வொரு ஷோவிலும் கலக்கி வந்தவர் புகழ்.
ஒரு காலத்தில் கஷ்டப்பட்டாலும், தற்போது படிப்படியாக முன்னேறி முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவரது வளர்ச்சியை நண்பர்கள் உட்பட ரசிகர்களும் மகிழ்ச்சியாய் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சிக்கு வந்த புகழ் மிக உருக்கமாக பேசிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
அதில், என்னையெல்லாம் முன்னாடி மதிக்கவே மாட்டார்கள் இப்போது யார் பார்த்தாலும் என்ன புகழ் என்னை மறந்துட்டியா என்று கேட்கும் அளவிற்கு நான் வளர்ந்து விட்டேன் என கூறியுள்ளார்.
நான் வளர்ந்ததுக்கு அப்புறம் தான் உனக்கு என்னை தெரிந்தது என பதிலுக்கு புகழ் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பல நாள் வருத்தப்பட்ட அழுதுள்ளதாகவும் கூறுகிறார்.
இந்த ப்ரமோ வைரலாகும் நிலையில், புகழை அழவைத்து TRP ஏற்ற வேண்டுமா என அவரது ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.