அன்றாடம் கூலி வேலை! ஒரேநாளில் லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்- எத்தனை கோடி தெரியுமா?
கேரள அரசின் விஷூ பம்பர் லாட்டரி குலுக்கல் சீட்டில் கட்டிட தொழிலாளிக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் வடகரா பகுதியைச் சேர்ந்தவர் ஷிஜூ, கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி நடந்த விஷூ பம்பர் லாட்டரி குலுக்கல் சீட்டில், ஷிஜூக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி விழுந்தது.
இத்தகவல் யாருக்கும் தெரிவிக்கப்படாமல், யார் அந்த நபர் என தேடுதல் வேட்டையை தொடங்கினர் அதிகாரிகள்.
இந்நிலையில் நேற்று ஷிஜூ, வெற்றி பெற்ற லாட்டரி சீட்டுடன் வங்கிக்கு சென்ற போதே பரிசு விழுந்தது தெரியவந்தது.
உடனடியாக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ததுடன், தன் குடும்ப கஷ்டம் இனிமேல் தீர்ந்துவிடும் என மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாராம் ஷிஜூ.
மேலும் கூறுகையில், நான் அடிக்கடி கேரள லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்தேன். இதுவரை பெரிய அளவில் பரிசு விழவில்லை.
இப்போதும் பரிசு விழும் என நினைக்கவில்லை. இம்முறை நான் எதிர்ப்பார்க்காத நிலையில் ரூ. 10 கோடி பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி என் கஷ்டங்கள் தீர்ந்து விடும்.
பரிசு பணத்தில் எங்கள் குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார்.