இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தணுமா? இந்த சாற்றை குடிங்க
உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்த விரும்பினால் அதற்கு சுவாமி ராம்தேவ் பரிந்துரைத்த இந்த சாற்றை தினமும் குடித்தால் போதும்.
இரத்த சக்கரை அளவு
உலகில் மிக அதிகமான மக்கள் பாதிக்கப்படும் நோய் என்றால் அது நீரிழிவு நோய் தான். உடலில் இரத்தத்த சக்கரை அளவு அதிகரித்தால் நீரிழிவு நோய் அதிகமாகும்.
உடலில் இரத்த சக்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்க மிக முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டியது நமது உணவு கட்டுப்பாட்டை தான். அதை நாம் ஒழுங்காக கட்டுப்பாட்டுடன் கடைபிடித்தால் இரத்த சக்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
யோகா குரு சுவாமி ராம்தேவின் கூற்றுப்படி உடலில் ரத்த சக்கரை அளவு கட்டுபாட்டில் இருக்க நாம் குறிப்பிட்ட 3 காய்கறிகளின் சாற்றை ஒன்றாக கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமாம். அதை பற்றி பார்க்கலாம்.

சுவாமி ராம்தேவ் சொல்லும் சாறு
தக்காளி, பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் சாறு
வீட்டில் இருக்கும் தக்காளி, பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் போன்னறவற்றில் ஒரு சாறு செய்து தினமும் குடிக்க தொடங்கினால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் என சுவாமி ராம்தேவ் கூறுகிறார்.
இந்த சாறுகளில் உள்ள பொருட்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும். அதாவது இந்த சாற்றைக் குடிப்பதன் மூலம் இயற்கையாகவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
இதை அதிகாலை வெறும்வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துங்கள்
இந்த தக்காளி, பாகற்காய் மற்றும் வெள்ளரி சாறு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஆயுர்வேதத்தின்படி, நீரிழிவு நோயாளர்கள் கட்டாயம் குடிக்க வேண்டிய பானம் இதுவென கூறப்படுகின்றது.
இதை குடிப்பதால் நமது இரத்த அழுத்தமம் கட்டுக்குள் இருக்குமாம். இது தவிர எடை இழப்பில் ஆர்வம் இருப்பவர்கள் இந்த சாற்றை குடிக்கலாம்.

உங்களுக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கும்
தக்காளி, பாகற்காய் மற்றும் வெள்ளரி சாறு நம் உடலின் குடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதனை வெறும் வயிற்றில் காலையில் குடிக்கும் போது நமது மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சினைகளைப் போக்க உதவும்.
ஒட்டுமொத்தமாக, தக்காளி, பாகற்காய் மற்றும் வெள்ளரி சாற்றை சரியான அளவு மற்றும் சரியான முறையில் உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும் என சுவாமி ராம்தேவால் பரிந்துரைக்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |