தொடர் தும்மலால் அவதிப்படுகிறீர்களா? எவ்வாறு இதனை தடுப்பது?
தும்மல் எதனால் ஏற்படுகின்றது என்றும் அதற்கான பரிசோதனை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தும்மல் ஏற்படுவது ஏன்?
நாம் வெளியிலிருந்து காற்றை சுவாசிக்கும் போது நமது மூக்குக்குள் காற்றைத் தவிர வேறு எந்த பொருளும் சென்றால், அதனை உடனடியாக வெளியே தள்ளுவதற்கு முயலுமாம்.
அவ்வாறான எதிர்ப்பின் வெளிப்பாடு தான் தும்மல் ஆகும். ஒவ்வாமை என்பது தும்மலின் முக்கிய காரணமாகும்.
தூசி, புகை, வாசனைத் திரவியங்கள், வாகன மற்றும் தொழிற்சாலை புகை, குளிர்ந்த காற்று, ஒட்டடை, செல்லப் பிராணிகளின் முடி, காடை மற்றும் புறாவின் எச்சம் போன்றவை தும்மலை தூண்டும் முக்கிய காரணிகள்.
இது மட்டுமின்றி அதிக உணவு உட்கொண்ட பின்பு, திடீர் வெளிச்சம் பார்க்கும்போது கூட தும்மல் ஏற்படலாம்.
பரிசோதிப்பது எப்படி?
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ வரை இருக்கலாம் என்றும் தும்மும்போது வாய்வழியாக வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதனால், கைக்குட்டை அல்லது துணியால் மூக்கை மூடுவது நல்லது. மிகப்பெரும் அழுத்தத்துடன் தும்மும்போது காதுகளில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
image: shutterstock
தும்மலுடன் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதுடன், ஒவ்வாமை என்பதை தெரிந்து கொள்ள அலர்ஜி பரிசோதனை செய்து பார்ப்பது அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
