சீரியல் படப்பிடிப்பில் 35 பேரில் 26 பேருக்கு கொரோனா... தெரியாமல் நடக்கும் படப்பிடிப்பு! வெளியான உண்மைகள்
தமிழகத்தில் ஊரடங்கையும் மீறி படப்பிடிப்பிடிப்பு நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க கோரி பிரபல நடிகை செய்துள்ள டுவிட் பயங்கர வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சித்து +2 மூலம் அறிமுகமான நடிகை சாந்தினி, பல திரைப்படங்களில் நடித்ததுடன், தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.
தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் வரும் 24ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சின்னத்தி மற்றும் திரைப்படம் படப்பிடிப்புகள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக நடிகை சாந்தினி டுவிட்டரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பது, "முழு ஊரடங்குதானே நடைமுறையில் இருக்க வேண்டும்? பிறகு எப்படி மறைமுகமாகச் சென்னையில் பல படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன? மக்களின் உயிர்தான் எல்லாவற்றையும் விட முக்கியம்
நோய்த்தொற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.
Isn’t it supposed to be a complete lockdown ? How come a lot of shootings are happening in chennai unofficially. People’s lives matter the most and we need to curb the spread .
— Chandini Tamilarasan (@IamChandini_12) May 13, 2021
Requesting our CM @mkstalin sir to please look into this and take the required actions .
தமிழ் திரைப்பட இயக்குனராக ஆர்.கே. செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள நிலையில் பல உண்மைகளை கூறியுள்ளார்.
அரசிடம் படப்பிடிப்பிற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், சினிமா துறை உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அளிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சினிமா துறையினருக்கு தனி மையம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
தற்போது சமீபத்தில் நடைபெற்ற சீரியல் படப்பிடிப்பின் போது, 35 பேரில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தில் அம்மா, அப்பா, மனைவி என அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, இதில் அம்மா, அப்பா, உறுப்பினர் 3 பேரும் உயிரிழந்த நிலையில் மனைவி மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்ற உண்மையை கூறியுள்ளார்.
ஆதலால் வரும் மே மாதம் 31 தேதி வரை சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை என்றும் தாங்கள் கொடுத்த முதல் கோரிக்கையினை திரும்பப்பெற்றுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.