காதலனை நம்பி காட்டிற்குள் சென்ற சிறுமி... 2 நாட்கள் நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடுமை
காதலனை நம்பி காட்டுக்குள் சென்ற சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து 2 நாட்கள் வன்கொடுமை செய்துள்ள 4 பேரை போக்சோ சட்டத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்த பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல்(21).
இவர் குளச்சல் அருகே உள்ள வாணியங்குடி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருடன் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ள நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனியாக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியிடம் பொய் கூறி கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் பகுதியில் உள்ள உலக்கை அருவிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முதலில் அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு பின்னர் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றார் மைக்கேல். தன்னுடன் நெருங்கி பழகும் நம்பிக்கையில் சென்ற சிறுமிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டிற்குள் அழைத்து சென்ற மைக்கேல் தனது நண்பர்களுடன் 2 நாட்களாக சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
குறித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் ஆல்டோ மைக்கேல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.