முதல்வர் விஜய்க்கு Checkmate வைத்த பிரக்ஞானந்தா.. தோல்விக்கு பின்பு முதல்வரின் ரியாக்ஷன் என்ன?
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடி தோல்வியடையந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
முதல்வர் விஜய்
தமிழ்நாடு முதல்வராக இருக்கும் விஜய், சென்னை தலைமை செயலகத்தில் செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ளார்.
நார்வே செஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

இந்நிலையில் சாம்பியன் பட்டத்தினை வென்ற பிரக்ஞானந்தாவினை தலைமை செயலகத்திற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.
ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி 20 வயதில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தினை பெற்று இன்று சென்னை வந்த நிலையில், முதல்வர் விஜய் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையான ரூ.50 லட்சத்தினை காசோலையாக வழங்கியுள்ளார்.
பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர்
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் "ஹோம் ஆஃப் செஸ்" என்ற தனிப்பட்ட சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது.
இந்த அகாடமியின் மூலம் முறைப்படி பயிற்சி முகாம்களை நடத்துதல், வீரர்களின் செயல்திறனைக் கண்காணித்தல், சர்வதேச அளவிலான அனுபவத்தை வழங்குதல், நவீன கருவிகள் மற்றும் ஒத்திகை மென்பொருள்களின் மூலம் மேம்பட்ட பயிற்சி அளித்தல் போன்றவை வழங்கப்படுகிறது.

சாதனை பெற்று வந்த பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடினார். இரண்டு, மூன்று தருணங்களில் காய் நகர்த்தி பிரக்ஞானந்தா காயையும் முதல்வர் அடித்த நிலையில், கடைசியாக பிரக்ஞானந்தா முதல்வருக்கு Checkmate வைத்துள்ளார்.
பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் ஜோசப் விஜய்!
— Zee Tamil News (@ZeeTamilNews) June 8, 2026
#CM #Vijay #Praggnanandhaa #NorwayChess #BreakingNews #ZeeTamilNews pic.twitter.com/rnWhgTXLxR
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |