திருமண ஆசை காட்டி இலங்கை பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா ! மீண்டும் அதிரடியாக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதார துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரை ஆர்யா திருமணம் கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சிபிசிஐடி'யிடம் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி'க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.