ஒற்றைத் தலைவலிக்கு உடனடி நிவாரணம் தரும் எலுமிச்சை சாறு.. உடனே குடிங்க
தற்போது பலரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக ஒற்றை தலைவலி பார்க்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம், சத்தம், பசி உள்ளிட்ட காரணங்களால் ஒற்றை தலைவலி வருகிறது.
மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஒற்றை தலைவலி குறையாத போது சிலர் வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கிறார்கள்.
அப்படியாயின், அடிக்கடி ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள் எலுமிச்சை சாறு குடித்தால் குணமாகும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது உண்மையா? என்பதனையும் இதற்கான அறிவியல் காரணங்களையும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மருத்துவர் விளக்கம்
ஒற்றைத் தலைவலி அதிகமாக வருபவர்களுக்கு வலி குறைய வேண்டும் என்றால் எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் தலைவலி கணிசமாக குறையும் என்கிறார்கள். இதற்கான நவீன மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தலைவலி உள்ளவர்கள் அந்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்துக் கொள்வது நல்லது. அத்துடன் வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்தால் வலி குறையும்.
தீர்வு
ஒற்றை தலைவலி வருவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் பொழுது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால் சன் கிளாஸ், குடை, தொப்பி போன்றவை பயன்படுத்தலாம். அதே போன்று செல்போன், லேப்டாப் அதிக நேரம் பார்த்தாலும் ஒற்றைத் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. பார்க்கும் நேரத்தை குறைத்து கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.
சிலர் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் ஹெட் போனில் அதிக நேரம் பாட்டு கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனை குறைத்துக் கொள்ளும் பொழுது ஒற்றை தலைவலி வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |