புதன் மற்றும் சூர்யனின் கூட்டணி: ஜுன் 3 வரை ராஜயோகத்தில் மூன்று ராசிகள்
வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு காரணமான சூரியனும், புத்திசாலித்தனம், செல்வச்செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான புதனும் கூட்டணி அமைத்துள்ளனர்.
சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் இணையும் போது அது புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இன்று அதாவது மே 15 முதல் ரிஷப ராசியில் புத்தாதித்ய யோகம் உருவாகிறது.
கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நேரத்தில் கிரகங்களின் ராஜாவான 'சூரியன்' மற்றும் இளவரசன் 'புதன்' ஆகிய இருவரும் ரிஷப ராசியை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே ரிஷப ராசியில் புதன் இருந்த நிலையில் இன்று சூரியனும் ரிஷப ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை புத்தாதித்ய யோகத்தை உருவாக்குகிறது.
இந்த யோகம் ஜூன் 3ம் தேதி வரை அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். எந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
சித்ராவின் தற்கொலை விவகாரம்! கணவர் ஹேம்நாத்திடம் மீண்டும் தீவிர விசாரணை
மிதுனம்
ரிஷப ராசியில் உருவாகும் புத்தாதித்ய யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பணத்துடன் பல விஷயங்களில் சுப பலன்களைத் தரும். தொழிலில் பல வெற்றிகளைப் பெறுவார். நீங்கள் பெரிய சாதனைகளை செய்யலாம். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பேச்சினாலேயே பெரிய காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
புத்தாதித்ய யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். அவர்களுக்கு பணம் கிடைக்கும். பதவியும் நன்மை தரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கும் இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வார்கள். பணியிடத்தில் பாராட்டுக்களை பெறுவார்கள்.
இன்றைய ராசிபலன்: குபேர அருளால் கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாதித்ய யோகம் மிகவும் சாதகமாக அமையும். அவர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கலாம். புதிய வழிகளில் பணம் வரும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறலாம். பெரிய அலவிலான ஒப்பந்தம் கை கூடலாம். திடீர் பண ஆதாயம் கூடும்.