கொரோனாவால் தொடர்ந்து பலியாகும் குழந்தைகள்.. காரணம் என்ன? கதிகலங்கிய பிரேசில் மக்கள்!
உலக முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
அங்கு, தொடர்ந்து கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக பரவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 80,529 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 93 ஆக அதிகரித்து இருக்கிறது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,774 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 3.65 லட்சத்தை கடந்து விட்டது.
பலி எண்ணிக்கையில் பிரேசில் நாடு தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பிரேசிலில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுவரை சுமார் 1,300 பச்சிளங்குழந்தைகள் மற்றும் 9 வயதிற்குட்பட்ட 800-க்கும் மேற்பட்ட சிறுவர்- சிறுமிகள் கொரோனா பாதிப்புக்கு இறந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.