பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் கொத்தமல்லியில் இந்த பேராபத்தும் உள்ளதா?
கொத்தமல்லியை பற்றி அனைவருக்கும் அறிந்தே ஒன்றே.. கொத்தமல்லி இலை மற்றும் அதனுடைய விதையில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் உள்ளன.
கொத்தமல்லி அந்த அளவிற்கு விலை உயர்ந்ததும் கிடையாது... இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு ,எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.
இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன.
மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.
4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடித்தால், உடல் சூடு தணியும். களைப்பும் காணாமல் போயிடும் விளைவுகள் கொத்தமல்லியை நேரடியாக உட்கொண்டால் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும். உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பும் ஏற்படும்.
மேலும், இதில் அதிகப்படியான கந்தகத்தை கலப்பதால் உட்கொள்ளும் போது எரியும் உணர்வை உண்டாக்கும். செரிமான சக்தியை குறைத்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சருமத்திற்கும் கண்களுக்கும் எரிச்சலை உண்டாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.