கடலில் மிதந்து கொண்டிருந்த Boat-ல் ஏறி அலப்பறை செய்த Pelican- பதற்றத்தில் பயணிகள்
கடலில் மிதந்து கொண்டிருந்த படகில் ஏறி அலப்பறை செய்த பறவையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தினமும் சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இவற்றில் சில காண்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், சில வீடியோக்கள் நம்மை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. இன்னும் சில நம்மை பதபதைக்க வைக்கின்றன.
அப்படியொரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
பெலிகன் பறவையின் அலப்பறை
அந்த வகையில், பயணிகள் பயணிக்கும் படகு நடுக்கடலில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பெலிகன் பறவையொன்று பயணிகளிடம் உணவு கேட்கிறது.
அப்போது தனியாக ஒருவரிடம் மாத்திரம் கேட்காமல் தனித்தனியாக ஒவ்வொரு பயணிகள் முன்னால் நின்று கேட்கிறது. இதனை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர் பயத்தில் கத்துகிறார்கள்.
கடைசியாக அங்கிருந்த பயணிகளில் ஒருவர் பெலிகன் பறவைக்கு உணவு வழங்குகிறார். உணவை வாங்கிய பின்னர் அங்கிருந்த பறந்து செல்கிறது.
இந்த காணொளி பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |