தாய் பறவைக்கு உணவூட்டிய சேய் பறவை… நெகிழ வைக்கும் ஒரு நிமிட காட்சி
பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் சின்னஞ் சிறிய பருவத்தில் மிகவும் பொறுப்போடு பார்த்துக் கொள்கிறார்கள். தங்களைப் பார்த்து, பார்த்து வளர்த்துவிட்டு, புத்தாடை வாங்கிக் கொடுத்து, விரும்பிய பண்டங்கள் எல்லாம் வாங்கிக்கொடுத்து பெற்றோர் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலும் அவர்களின் முதுமைப் பருவத்தில் எத்தனை பிள்ளைகள் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதே கேள்விக்குறி.
அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டுவது போல் இங்கே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த இந்தக் காட்சியில் வழக்கத்தைவிட ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாகவே குட்டிப்பறவைக்கு தாய்ப்பறவை உணவை சேகரித்து வந்து ஊட்டுவதைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு தாய்ப்பறவை வயோதிகத்தால் பறக்க முடியாமல் ஒரு இடத்தில் இருக்கிறது.
குட்டிப்பறவை அதற்கு உணவினை சேகரித்து தாய்ப்பறவையின் வாயில் ஊட்டி விடுகிறது. ஒன்றரை நிமிட இந்தக் காட்சியில் வாழ்க்கைத் தத்துவத்தையே இந்தப் பறவைகள் போதித்துவிடுகிறது.