வெளியில் வந்ததும் முதலில் பார்த்தது இதை தான்! சுபிக்ஷா ஓபன் டாக்
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சுபிக்ஷா, வெளியில் சென்றதும் விஜய் தொகைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றது.
பிக்பாஸ் சீசன் 9
போட்டியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி பார்வதியும் கம்ருதினும் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவதாக இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேற்றப்படிருந்தார்.
பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த சமயத்தில், இரண்டு போட்டியாளர்கள் தற்போது ரெட் கார்ட் வாங்கி வெளியேறி இருக்கின்றனர்.
டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் சாண்ட்ராவை காரில் இருந்து தள்ளிவிட்டமை மற்றும் கெட்ட வார்த்ததைகள் பேசியமை ஆகிய விடயங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தது.

இதனால் ரசிகர்கள் பார்வதி, கம்ருதினுக்கு ரெட் கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே விஜய் சேதுபதி அதிரடியாக இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

வழக்கமாக, பிக்பாஸ் போட்டியில் வாரத்தின் முதல் நாள் யாரெல்லாம் நாமினேட் செய்யப்படுகிறார்களோ, அவர்களில், மக்கள் மத்தியில் யாரெல்லாம் வாக்கு குறைவாக பெற்றிருக்கிறார்களோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அந்தவகையில், இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேற்றப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுபிக்ஷா, வெளியில் சென்றதும் விஜய் தொகைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |