பிக் பாஸ் திவ்யாவை சொந்த மண்ணில் வரவேற்ற மக்கள் - வைரல் காணொளி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைடில் வின்னர் திவ்யாவை அவின் சொந்த ஊரில் வரவேற்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த சிசனை பலரும் கடைசி சுற்று வரைக்கும் விமர்சித்து கொண்டே தான் இருந்தனர்.
இதில் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களும் போட்டியாளர்களாக இறக்கப்பட்டனர். இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

அதில் வைல்டுகார்டு போட்டியாளராக நான்கு பேர் வந்தனர். அதில் போட்டியாளர் தான் திவ்யா. திவ்யாவின் நேர்மையான குணம் மக்களுக்கு பிடித்து இருந்ததால் திவ்யாவிற்கு வாக்குகள் அதிகமாக இருந்தது.
இதனால் இவர் டைடில் வின்னராக தேர்ந்தெடுக்கபட்டார். வெற்றி பெற்ற திவ்யா தனது ராமநாதபுரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது அங்குள்ள மக்கள் திவ்யாவிற்கு சிறந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். வாணவேடிக்கைகள் மற்றும் ஆரத்தியுடன் அவரை மக்கள் வரவேற்றனர்.
தற்போது அந்த கிராமத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவில் திவ்யா கலந்து கொண்டு உள்ளார். ஒரு பிரபலம் என்பதை மறந்து தன் மக்களுடன் திவ்யா சாப்பட்டு மகிழ்ச்சியாக இருப்பது பெருமையான விடயம். தற்போது இந்த காணொளி வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |