இலங்கை பெண் ஓரங்கட்டப்படுகின்றாரா? கொளுத்தி போட்ட பிக்பாஸ்... முட்டி மோதப் போகும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெறும் பண்டிகை கொண்டாட்டம் தான் அரங்கேறும் என ரசிகர்கள் அப்செட்டாகி இருந்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.
புதுசா டாஸ்க் கொடுத்து கொளுத்திப் போட பிக்பாஸ் திட்டமிட்டுள்ளார். இன்று வெளியாக முதல் மற்றும் இரண்டாவது புரமோ அதை நிறுபிக்கும் வகையில் இருக்கின்றது.
இந்த சீசன் ஆரம்பித்து இன்னும் நாரதர் வேலையை நம்ம பிக் பாஸ் ஆரம்பிக்கவில்லையே வெறும் அழுகாச்சி சீரியலே ஓடிக் கொண்டிருக்கிறதே என ஏங்கிப் போய் ரசிகர்கள் காத்திருந்தன.
அவர்களுக்கு காதில் இன்பத் தேன் வந்து பாயும் விதமாக பிக் பாஸ் ஈடுபாடு குறைவு மற்றும் ஈடுபாடு அதிகமான போட்டியாளர்கள் குறித்து பிக் பாஸ் குழு முடிவு செய்ய வேண்டும் என கொளுத்திப் போட்டுள்ளார்.
அதில் முதலாவது பெயராக இலங்கையை பூர்விகமாக கொண்ட மதுவின் பெயர் அடிப்படுகின்றது. இப்படி ஓப்பனாக பெயரை கூறுவதால் இனி பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை வெடிக்கும் என்று நெட்டிசன்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.