Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த பிரவீன், திவாகர்... உடனே எகிறிய சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் வெளியேறிய பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், திவாகர் ஆகியோர் உள்ளே வந்து பயங்கரமாக கலக்கி வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் ரெட்கார்டு கொடுத்து கம்ரு, பார்வதி வெளியேற்றப்பட்ட நிலையில், சுபிக்ஷாவும் குறைவாக வாக்குபெற்று வெளியேறினார்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர். இதில் யார் இறுதி மேடைக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் போட்டியாளர்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் அரங்கேறியுள்ளது. மேலும் வெளியே சென்ற போட்டியாளர்களில் வியானா நேற்று வீட்டிற்கு வந்த நிலையில், இன்று பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், திவாகர் ஆகியோர் வந்துள்ளனர்.
வியானாவைப் போன்று பிரவீன் ராஜ் உள்ளே வந்து விக்ரம் விளையாடும் விதத்தைக் குறித்து கவலைபட வைக்கின்றார். மேலும் திவாகர் வந்த உடனே தனது நடிப்பை ஆரம்பித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |