லட்சங்களில் சம்பளம் வாங்கி வெளியேறிய ரம்யா ஜோ.. எவ்வளவு தெரியுமா?
டீ, காபி இல்லாமல் கடந்த ஒரு வாரமாக தவித்து வந்த ரம்யா ஜோவின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் 10 வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன் மற்றும் ரம்யா ஜோ ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
சம்பளம் எவ்வளவு?
இந்த நிலையில், பிரஜனுக்கு அடுத்தப்படியாக நேற்றைய தினம் ரம்யா ஜோ வெளியேற்றப்பட்டுள்ளார். டபுள் எவிக்ஷன் எனக் கூறப்பட்டு வந்த வேளையில், இன்றைய தினம் குறைவான வாக்குகளை பெற்று வியானா வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது.
ரம்யா ஜோ வெளியேறிய பின்னர் மேடையில் வைத்து விஜய் சேதுபதி டீ கொடுத்து நடிக்க இனி வாய்ப்பு வரும் என வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

69 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய ரம்யா ஜோவுக்கு வாரத்திற்கு 50 ஆயிரம் கொடுக்கப்பதாக கூறப்படுகிறது.
வீட்டின் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடிய ரம்யா ஜோ சுமாராக 12 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடியிருக்கிறார். இதன்படி இவருக்கு 6 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |