ஆட்டத்தை கலைத்த மக்கள்.. அனல் பறக்கும் வொர்ட்டிங்- அடுத்தது யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9-ல் 9-ஆவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர்கள் யார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வொரட்டிங் லிஸ்ட்டுடன் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஏழு வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
இந்த வாரம் வெளியேறுவது யார்?
இந்த நிலையில் எட்டாவது வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
வாக்குகள் அடிப்படையில், பிரஜன், சாண்ட்ரா இருவரும் குறைவான வாக்குக்களை பெற்று வெளியேறும் நிலையில் இருக்கிறார்கள். இதற்கிடையில் ரம்யா ஜோ நிகழ்ச்சியில் இருக்க முடியாது என விஜய் சேதுபதியிடம் கூற, அதற்கு அவர், “ தயவு செய்து வெளியில் வந்துருங்க...” என கூறுகிறார். விஜய் சேதுபதியின் கூற்றிற்கமைய பிக்பாஸ் கதவுகளும் திறக்கப்பட்டன.

நந்தினி போன்று ரம்யா ஜோவும் விளையாட்டை விளையாட முடியாது என வெளியேறுகிறார்.
இந்த செய்தி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |