பிக்பாஸ் 6ல் முதல் ஆளாக சென்ற விவாகரத்து நடிகை! தீயாய் பரவும் புகைப்படம்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்துள்ளது.
இதுவரை முடிந்துள்ள 5 சீசன்களில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் ரித்விதாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர் ஆனதோடு ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் வென்றனர்.
பிக்பாஸ் சீசன் 6
அக்டோபர் 2ம் தேதி 17 முதல் 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் துவங்க இருப்பதால், அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை குறித்த தகவலும் இணையத்தில் வைரலாக பரவுகிறது.
இந்த முறை பிக் பாஸ் சீசன் 6ல் பொதுமக்களும் கலந்து கொள்வதால் 2 போட்டியாளர்கள் சாதாரணமானவர்களாக மக்களின் சார்பாக முதன்முதலாக கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவியின் பிரபலங்கள் 2 பேர் பிக்பாஸ் சீசன் 6 வீட்டில் முதல் ஆளாக நுழைந்து சோபாவில் அமர்ந்தபடி மைக்கில் அவர்கள் பெயர் எழுதி பக்கா பிக்பாஸ் போட்டியாளர்களாகவே பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் டிடி மற்றும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் பிக்பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக செல்கின்றனர் என்று கூறி வருகின்றனர்.