விலைமதிப்பற்ற பரிசு கொடுத்த கமல்…வியப்பில் உறைந்த ராஜூ! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த பிரியங்கா
பிக் பாஸ் ஒடிடியில் பிக் பாஸ் அல்டிமேட் எனும் பெயரில் தமிழில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளதாக உலகநாயகன் அறிவித்தார்.
பாவனி வெளியேறிய பின்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் உலகநாயகன் கமல்ஹாசனே நேரில் சென்றார்.
பிரியங்காவுக்கு மைக்கும், ராஜுவுக்கு பேனாவும் பரிசளித்தார் . பிறகு இருவருடனும் புகைப்படம் எடுத்து உடனடியாக அதுவும் ஃபிரேம் செய்யப்பட்டு பரிசாக வழங்கப்பட்டது.
அடுத்தடுத்து விலைமதிப்பற்ற பரிசுகளை உலகநாயகன் கையில் பெற்ற மகிழ்ச்சியில் பிரியங்கா துள்ளி குதித்தார்.
ராஜூவும் வியப்பில் மூழ்கி விட்டார். மேலும், பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு தகவலை நடிகர் கமல் கூறினார்.
அதாவது பிக் பாஸ் ஒடிடியில் பிக் பாஸ் அல்டிமேட் எனும் பெயரில் தமிழில் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு சீசன் போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விரைவில் ஒளிபரப்பாகும்.